Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/நிம்மதி மிகவும் முக்கியம்

நிம்மதி மிகவும் முக்கியம்

நிம்மதி மிகவும் முக்கியம்

நிம்மதி மிகவும் முக்கியம்

ADDED : அக் 14, 2011 04:10 PM


Google News
Latest Tamil News
* செல்வம், புகழ் இருந்தால் வெளியுலகில் வேண்டுமானால் உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். ஆனால், தூய்மையான மனம் இருந்தால் தான் நிம்மதி இருக்கும்.

* நல்லதை நினைத்து, நல்லதையே செய்தால் மனம் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால் வாழ்வில் எதைக் கண்டும் பயம் ஏற்படாது.

* உங்கள் ஆசை நேர்மையானதாக இருந்தால், தெய்வம் உங்கள் செயல்பாட்டுக்கு துணை வரும்.

* மனம் தூய்மையாகும் போது இன்பத்தை அறிவீர்கள். இன்பத்தை அறியும் போது இறைவனை அறிவீர்கள்.

* பிறருக்கு கெடுதல் செய்துவிட்டு நல்லவனாக நடித்தாலும், உங்கள் உள்மனது உறுத்தும், நிம்மதி, கெடும், உங்களை சேர்ந்தவர்களும் நிம்மதி இழப்பர். எனவே நல்லதையே செய்ய வேண்டும்.

* கடவுள் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சக்தியை வழங்குகிறார். தகுந்த நேரத்தில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறார். அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

- அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us